Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பொய் குற்றச்சாட்டு.. தற்கொலை நாடகம்... நடிகை அதிதி மீது அறிமுக இயக்குநர் புகார்!
நடிகை அதிதி பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி தற்கொலை நாடகமாடுவதாக அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செல்வகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நான், நெடுநல்வாடை என்ற படத்தை இயக்கி வருகிறேன். இதில், கதாநாயகியாக அதிதியை அறிமுகப்படுத்தினேன். முதல்கட்ட படப்படிப்பு முடிந்ததும், பட்டதாரி என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.
என் படம் முடியாமல் இருந்தபோதும், அந்த படத்தில் நடிக்க அவரை அனுமதித்தேன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது உடல்ரீதியாக சோர்ந்துபோய் பலவீனமாக இருந்தார். காட்சிகளில் ஈடுபாடின்றி நடித்தார்.
இரவு நீண்டநேரம் தூங்காமல் போனில் பேசிவிட்டு, காலையில் படப்பிடிப்புக்கு கண் வீங்கி வந்தார். இதனால், அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பட்டதாரி படத்தில் தன்னுடன் கதாநாயகனாக நடிக்கும் அபிசரவணனுடன் தொடர்பு இருப்பதாகவும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும், படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல் நடித்து முடிப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை. படப்பிடிப்புக்கு வராமல் மாயமாகிவிட்டார். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையும் நடந்தது. எதற்கும் ஒத்துழைக்கவில்லை.
அபிசரவணனுடனான மறைமுக காதல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக என் மீது நான் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தினேன் என்றும், தவறாக நடக்க முயன்றேன் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்கொலை நாடகம் நடத்துகிறார். இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.