Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்!
சென்னை: ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மலையாள மொழியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ஜல்லிக்கட்டு.
இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தப்பிக்கும் எருமை
இந்த ஜல்லிக்கட்டுப் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். ஒரு மலைக்கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது.
படக்குழுவுக்கு வாழ்த்து
அந்த மாட்டை பிடிக்க கிராமத்தினர் தீவிரமாக முயற்சிப்பதுதான் படத்தின் கதை. இந்நிலையில் இந்தப் படம் ஜல்லிக்கட்டுக்கு தேர்வாகி உள்ளது. இதனை முன்னிட்டு பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிகவும் பிடித்தது
அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, லிஜோவின் 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் பிடித்தது.
வாய்ப்பு இருக்கிறது
இந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.. இவ்வாறு செல்வராகவன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.