Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜூலை மாதத்தில் சாணிக் காயிதம் இறுதி கட்ட படப்பிடிப்பு.. அடுத்த படத்துக்கு தயாராகும் செல்வராகவன்
சென்னை: செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் சாணிக் காயிதம்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சுரேஷ் செல்வராகவன் உடன் இணைந்து நடிக்கிறார்.
ரிலீஸ் ஆகவுள்ளது
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் விநியோகத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'ராக்கி'. இது அவரின் முதல் படமாகும். ராக்கி திரைப்படம் திரையரங்குகள் திறந்த உடன் ரிலீஸ் ஆகவுள்ளது என விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.
ஆர்வத்துடன் ரசிகர்கள்
அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் தான் சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் படம் ஏதும் இது வரை வெளிவரவில்லை என்றாலும் ரிலீஸ் ஆகவுள்ள முதல் இரண்டு படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
படக்குழு திட்டம்
கொரோனா இரண்டாம் அலை காரணமாக சாணிக் காயிதம் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதம் இறுதி கட்ட படப்பிடிப்பை தொடங்கி முழுவதுமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
செல்வராகன் - தனுஷ்
இந்த படப்பிடிப்பு முடிந்த உடன் செல்வராகவன் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்க தயாராகவுள்ளதாக தெரிகிறது. தனுஷ் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய உடன் #D43ல் நடிக்கவுள்ளார் அதன் பின்னர் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தடவை பட்டதே போதும்.. ஒரே அடியாக ஓட்டம் எடுத்த சமத்து நடிகை.. என்ன விஷயம் தெரியுமா?