Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த ப்ராஜெக்ட் ரெடி... சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்
சென்னை : டைரக்டர் செல்வராகவன் தன்னுடைய சிறப்பான இயக்கத்திற்காக நாடு முழுவதும் அறியப்படும் இயக்குநராக உள்ளார்.
இவரது ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களங்களால் போற்றப்பட்டு வருகின்றன.
பங்குனி வெயில் போல பளபளக்கும் ஈஸ்வரன் பட நடிகை.. என்ன விலை அழகே!
இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வித்தியாச கதைக்களங்கள்
டைரக்டர் செல்வராகவன் நடிகர் தனுஷின் சகோதரர். ஆரம்ப காலகட்டங்களில் தனுஷை வைத்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை இயக்கி தானும் பெயர் பெற்று தனுஷிற்கும் பெயரை பெற்றுத் தந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது.
சாணிக் காயிதம் படத்தில் நடிப்பு
எஸ்ஜே சூர்யா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. எஸ்ஜே சூர்யாவிற்கும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் பாராட்டு
சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், செல்வராகவன் ஆகச்சிறந்த நடிகர் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தானத்தின் மன்னவன் வந்தானடி, தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளன.
செல்வராகவன் அப்டேட்
ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் செல்வராகவன், தன்னுடைய ட்விட்டரில் க்ளோஸ்-அப் செல்பி ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் ஸ்கிரிப்டை முடித்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த ட்வீட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எந்த படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து பேசியுள்ளார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். விரைவில் அதையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.