என்னய்யா இது டைரக்டருக்கு வந்த சோதனை - ட்விட்டரில் செல்வராகவன் ஃபீலிங்
சென்னை : இயக்குநர் செல்வராகவன் தற்போது சந்தானம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கின்றார். இப்படம் முடிந்து அடுத்த சூர்யா படத்திற்கான வேலையில் இறங்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை, பல நாட்களாக அந்தப் படம் வெளிவருவதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டரில் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் 'இந்தப் படத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள், அது எங்க படம்' என்று மீம் போட்டு ட்வீட் செய்தனர்.
ரசிகர்களின் ட்வீட்டைப் பார்த்த செல்வராகவன் 'உங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க ப்ரோ' என்று ரிப்ளை செய்துள்ளார். இதைவைத்துப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் தரப்பில் தான் தாமதமாவதைப் போலத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











