உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: இயக்குனர் ஷங்கர்!
உக்ரைனில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை
Recommended Video

ட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ
சென்னை: உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர்.

உக்ரைனில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என கலைஞரின் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாபெரும் தலைவர், தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் கலைஞரின் இந்த செய்தி வருத்தமளிக்கிறது. உக்ரைனில் இருப்பதால் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. மிக மோசமாக உணர்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், சார்ந்தோருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடையட்டும் என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











