Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ராம்சரண் படத்தை டைரக்ட் செய்ய ஜரூராக தயாராகும் இயக்குநர் ஷங்கர்... செப்டம்பரில் சூட்டிங்
சென்னை : நடிகர் ராம்சரணை வைத்து அடுத்ததாக படம் இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்த படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பரில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில் ராஜூ தயாரிக்கவுள்ள இந்த படம் அவரது 50வது படம் என்பதால் முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.
மகள் கல்யாணத்துக்கு ஷங்கர் செலவு செய்தது இத்தனை கோடிகளா? தீயாய் பரவும் தகவல்!
ஷங்கருக்கு தடைவிதிக்க மறுப்பு
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படங்களில் ஷங்கர் வேலை செய்ய உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஷங்கருக்கு தடைவிதிக்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஷங்கர் இல்லத்தில் ஆலோசனை
இதையடுத்து ஷங்கர் தற்போது உற்சாகமடைந்துள்ளார். அடுத்ததாக தில் ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தினை தற்போது இயக்கவுள்ளார். நேற்றைய தினம் ஷங்கரின் இல்லத்தில் ஷங்கர், ராம்சரண் மற்றும் தில்ராஜூ ஆகியோர் இணைந்து படம் குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஷங்கருக்கு பாராட்டு
இதுகுறித்து ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பான விருந்தோம்பலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்சி15 படத்தின் சூட்டிங்கை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட பூஜை
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தில் ராஜூவின் 50வது படம் இதுவென்பதால் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.