Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராம் சரண் ட்வீட்... உற்சாகமா பதில் ட்வீட் போட்ட இயக்குநர் ஷங்கர்... மிகச்சிறப்பு
சென்னை: இந்தியன் 2 பட வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்ததாக ராம்சரணை வைத்து ஆர்சி15 படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்த படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷங்கர் இல்லத்தில் ராம்சரண், தில் ராஜூ உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து ராம்சரண் ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது ஷங்கர் உற்சாகத்துடன் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார்.
இந்தியன் 2 விவகாரம்...ஷங்கருக்கு க்ரீன் சிக்னல் காட்டிய ஐகோர்ட்
ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இயக்குநர் ஷங்கர் அடுத்த படங்களில் கமிட் ஆக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஷங்கருக்கு அப்படி உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஷங்கர் இயக்கம்
இதையடுத்து தனது அடுத்தகட்ட பணிகளில் தற்போது ஷங்கர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்து இரு தினங்களுக்கு முன்பு ஷங்கர் இல்லத்தில் மூவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ராம் சரண் பாராட்டு
இதையடுத்து ராம்சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த சந்திப்பின்போது தனக்கு அளித்த விருந்தோம்பல் குறித்து ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஷங்கர் மகிழ்ச்சிப் பதிவு
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். இத்தகைய விருந்தோம்பலை அளித்தது தங்களுக்கும் மகிழ்ச்சி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் அவரது 50வது படம். இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.