Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி!
சென்னை: ரசிகர்களை சென்றடையும் முன்பே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் ஹிட்டாகும் என இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார்.
ஆயிரம் நிலவே வா தொடங்கி இன்னும் ரிலீசாகாத அண்ணாத்த வரைக்கும் பாடி இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமான செய்தி உலக இசை ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது.
காதலன் பட நினைவுகளை பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காதலன் அனுபவம்
இளம் இயக்குநராக காதலன் படத்தை இயக்கிய ஷங்கருக்கு ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற ஜாம்பவான்களுடன் பயணம் செய்யும் அருமையான தருணங்கள் அமைந்தது. காதலன் படத்தில் ஹீரோ பிரபுதேவாவின் தந்தையாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை நடிக்க வைத்திருப்பார் ஷங்கர்.
ஷங்கர் உருக்கம்
ஒட்டுமொத்த இந்திய திரை பிரபலங்களும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் காதலன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அருகே அமர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹிட்டாகும்
ஒரு சில பாடகர்களுக்கு மட்டுமே அந்த சிறப்புத் தன்மை உள்ளது. ரசிகர்களை சென்றடைவதற்கு முன்பே ரெக்கார்டிங் தியேட்டரிலேயே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாட்டு ஹிட் ஆகிவிடும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காதலன் படம் தொடங்கி 2.0 வரைக்கும் ஏகப்பட்ட ஷங்கர் படங்களில் எஸ்.பி.பி பாடி உள்ளார்.
காற்றில் கலந்திருப்பார்
மேலும், நாம் அவரது உடலை மட்டுமே இழக்கிறோமே தவிர அவரது குரலை ஒரு போதும் இழக்கப் போவது இல்லை. அது என்றுமே இசையாய் காற்றில் கலந்து நம்முடனே காலம் முழுவதும் உறவாடும் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
புதிய மனிதா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். ரஜினிகாந்தின் ஓப்பனிங் பாடல்களுக்கு தொடர்ந்து பாடி வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் "புதிய மனிதா பூமிக்கு வா" பாடலில் ரோபோ ரஜினிக்கு பாடி இருந்தார். அதற்காக வித்தியாசமான முறையில் அவரது குரலை ஏ.ஆர். ரஹ்மான் படாத பாடு படுத்தி எடுத்தார் என அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஷங்கர் பேட்டி கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!