Don't Miss!
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- News அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. இதுதான் எங்க தமிழ்நாடு.. நாட்டிற்கே உதாரணமாய் மாறிய தஞ்சாவூர் திருவிழா
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!
சென்னை: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் சிவாஜி படத்தின் போது நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதுவரை ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய பிரமாண்ட படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷங்கரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சிவாஜி படப்பிடிப்பு
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷங்கர் ரஜினிகாந்த் குறித்த பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, சிவாஜி படப்பிடிப்பின் போது தண்டவாளத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. இதனால் அந்த தண்டவாள பகுதியில் நீண்ட நேரம் இருக்கவேண்டியதாயிற்று.
அங்கேயே சாப்பிட்டார்
அந்த தண்டவாளத்தில் நாற்றம் வீசும். அங்கிருந்தவர்கள் அனைவரும் கேரவனுக்கு சாப்பிட சென்றுவிட்டார்கள். ஆனால் அங்கேயே இருந்து உணவைச் சாப்பிட்டார் ரஜினி.
நேரத்தின் அருமை
ஏனென்றால் கேரவனுக்கு செல்ல 20 நிமிடங்களாகும். படப்பிடிப்பில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக கேரவனை தவிர்த்து தண்டவாளத்திலேயே அமர்ந்து சாப்பிட்டார். நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி.
நேரம் தவறாமை
படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். நேரம் தவறாமை என்பது ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
தினம் தினம் நினைப்பேன்..
தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று நினைத்து வேலை செய்பவர் ரஜினிகாந்த். நான் ரஜினியுடன் பணியாற்றி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் தினம் தினம் அவரை நினைத்துக்கொள்வேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அனிருத்துக்கு புகழாரம்
அப்போது இந்தியன் 2 படம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருடன் முதல் முறை கம்போசிங் அமைக்க அமர்ந்தேன், காட்சி வரும் நிகழ்வை கூறினேன். முதல் ட்யூன் போட்டார். அதுவே ஓகே ஆகிவிட்டது. அதேபோல் இரண்டாவது பாடலும் ஓகே. ஆனால் மூன்றாவது பாடலுக்கு ஐந்து ட்யூன் வரை சென்று விட்டது.அனைத்து தரப்பினருக்கும் பிடிக்க வேண்டும் என்று அனிருத் வேலை செய்கிறார் என்றார்.