Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்
சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா. இதையடுத்து அவர் பெயருடன் 'சிறுத்தை' சேர்ந்துகொண்டது.
இந்தப் படத்துக்கு முன், தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
ரஜினியின் அண்ணாத்த
2014-ம் ஆண்டு வீரம் படத்தின் மூலம் அஜித்துடன் சிவா இணைந்தார். இந்த படம் ஹிட்டானது. அடுத்தடுத்து விஸ்வாசம் வரை 4 படங்களில் அஜித்துடன் பணியாற்றினார். விஸ்வாசம் வெற்றியை அடுத்து தற்போது ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
ஷூட்டிங் நிறுத்தம்
கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் தந்தை ஜெயக்குமார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகைப்பட கலைஞர்
தந்தையின் திடீர் மரணத்தால் சிவாவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைத்துறையினரும், உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த ஜெயக்குமார், டாக்குமென்டரி புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர்.
இறுதிச் சடங்கு
அருணாச்சலம் ஸ்டூடியோவின் உரிமையாளர். தந்தை ஜெயக்குமாரின் மரண செய்தி கேட்டு இயக்குநர் சிவாவின் தம்பி, நடிகர் சிவா கேரளாவில் இருந்து சென்னைத் திரும்பியுள்ளார். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது. அவர் மறைவை அடுத்து திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.