Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்த வருஷத்தோட பெரிய பிறந்தநாள் கிப்ட்.. சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
'ஏகே 61’ ஃபர்ஸ்ட் லுக் எப்போ சார்..போனி கபூரிடம் அப்டேட் கேட்டு நச்சரிக்கும் இயக்குனர்!
இயக்குநர் சவுந்தர்யா ரஜினி
இயக்குநரும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த மணவாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்றார். தொடர்ந்து இவருக்கு இவரது குடும்பத்தினர் இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தனர்.
இரண்டாவது ஆண் குழந்தை
முதல் திருமணத்தில் இவருக்கு வேத் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் இரண்டாவது திருமணத்தின்மூலம் இரண்டாவதாக இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயரிட்டுள்ளார். இந்தக் குழந்தையை வரவேற்பதில் வேத்துடன் இணைந்து மகிழ்ச்சியடைவதாக முன்னதாக குழந்தை பிறந்தபோது சவுந்தர்யா தெரிவித்திருந்தார்.
சவுந்தர்யா பிறந்தநாள்
இந்நிலையில் நேற்றைய தினம் சவுந்தர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு
மேலும் இந்த ஆண்டு, கடவுள் தனக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்துள்ளதாகவும், தனது வீர் பாப்பாவை அவர்கள் பரிசாக தந்துள்ளதாகவும் சவுந்தர்யா குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடவுளின் குழந்தை எப்போதும் தனக்கு பின்புலமாக இருக்கும் என்றும் வாழ்க்கை எப்போதுமே உண்மையில் கிப்ட் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் புகைப்படம் பகிர்வு
மேலும் தன்னுடைய குழந்தையின் பெயர் சூட்டு விழாவின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் அவர் தன்னுடைய குழந்தையை கைகளில் ஏந்தி மாலையுடன் காணப்படுகிறார். அவரது பின்னால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் நின்றபடி உள்ளார். இந்தப் பதிவில் பல எமோஜிக்களையும் அவர் சேர்த்துள்ளார்.