Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமீரின் நாற்காலியில்… நடிகராக மாறும் இயக்குனர்
சென்னை : அமீரின் நாற்காலி படத்தில் இயக்குனர் சுப்ரமணியன் சிவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திருடா திருடி ,பொறி ,யோகி ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.
மௌம் பேசியதே படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். இவர் அடுத்து ராம் என்ற படத்தை இயக்கினார். தாய் மகன் அன்பை சொல்லும் படமாக இப்படம் இருந்தது இது பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் கார்த்திக்கின் அறிமுகப்படமான பருத்திவீரனை இயக்கினார்.
இப்படத்தில் நடித்தற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தின் மூலம் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவரானார். இதையடுத்து சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவான யோகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தினால் இயக்குனராக இருந்த அமீர் நடிகராக மாறினார்.
அவங்க இல்லையாமே... 'தலைவர் 169'-ஐ இவங்கதான் தயாரிக்கிறாங்களாம்
இவர் கடைசியாக வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. ராஜன் கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து ஒரு முக்கிய அரசியல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அமீர். வி.இஸட்.துரை இயக்கும் இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடபட்டது
தற்போது இந்த படத்தில் இயக்குனர் சுப்ரமணியன் சிவா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் திருடா திருடி ,பொறி ,யோகி ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.
வி.இஸட்.துரை, சமுத்திரகனியை வைத்து ஏமாளி என்ற படம் இயக்கி உள்ளார். அடுத்ததாக இவர் சுந்தர் சியை வைத்து இருட்டு படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இவர் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார்.
வடசென்னை படத்தில் தனுசுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் அமீர் நடித்து அசத்தி இருப்பார். அதே போல் நாற்காலி படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் ரசிகர்கள் அமீரை எதிர்பார்க்கின்றனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?