Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கொரோனா நிவாரண நிதி… இயக்குனர் சுசீந்திரன் ரூ 5 லட்சம் நிதிஉதவி !
சென்னை : ஆன்லைன் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்பின் மூலம் கிடைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு இயக்குனர் சுசீந்திரன் வழங்கினார்.
ரூ5 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார்.
மேலும், இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
எதிர்கால நடிகர்களுக்கு
இயக்குனர் சுசீந்திரன் திரையுலகில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வருபவர்களின் நலனுக்காக, எதிர்கால உதவி இயக்குநர்களாக மாற முயற்சிப்பவர்களுக்கும், ஏற்கனவே நடிகர்களாக நடித்து வருபவர்களுக்கும், எதிர்கால நடிகர்களாக மாறுவதற்கான முயற்சி, எங்கள் ஆன்லைன் திரைப்பட பட்டறையை தொடங்கினார். மேலும் இதில் கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
எதிர்கால நடிகர்களுக்கு
இயக்குனர் சுசீந்திரன் திரையுலகில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வருபவர்களின் நலனுக்காக, எதிர்கால உதவி இயக்குநர்களாக மாற முயற்சிப்பவர்களுக்கும், ஏற்கனவே நடிகர்களாக நடித்து வருபவர்களுக்கும், எதிர்கால நடிகர்களாக மாறுவதற்கான முயற்சி, எங்கள் ஆன்லைன் திரைப்பட பட்டறையை தொடங்கினார். மேலும் இதில் கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா நிவாரண நிதி
அதன்படி, ஜூன் 14 முதல் திரைப்படத் தயாரித்தல் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கிடைத்த பணத்தை ரூ .5 லட்சத்தை கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினிடம் இந்த தொகைக்கான காசோலையை இயக்குனர் சுசீந்திரன் வழங்கினார்.
மாணவர்களுக்கு நன்றி
இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழக்கப்படும். நான் அடுத்து இயக்கும் திரைப்படங்களில் உதவி இயக்குனர், நடிகர்களின் நேர்காணல் நடைபெறும் போது இந்த சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றார். பாடத்திட்டத்தை ஏற்பாடு செய்த கே.வி.மோதிக்கும், இதை சாத்தியமாக்கிய எனது உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் என் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.