Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு... உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி!
சென்னை : இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இயக்கம் ப்ளஸ் நடிப்பில் உருவாகியுள்ளது அரண்மனை 3 படம்.
இந்தப் படம் உலகளவில் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் உதயநிதி ஸ்டாலின் குறித்து இயக்குநர் சுந்தர் சி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரண்மனை 3ல் எதற்காக 3 ஹீரோயின்கள்... பிரஸ்மீட்டில் அசரவைக்கும் விளக்கம் கொடுத்த சுந்தர் சி!
இயக்கம் ப்ளஸ் நடிப்பு
இயக்கம் ப்ளஸ் நடிப்பு என பட்டையை கிளப்பிவருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 படங்கள் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. பேய்ப்படங்களில் காமெடியை புகுத்திய பெருமை சுந்தர் சியையே சாரும்.
14ம் தேதி அரண்மனை 3 ரிலீஸ்
இந்நிலையில் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது எடுத்துள்ளார் சுந்தர் சி. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது. வரும் 14ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.
செய்தியாளர் சந்திப்பு
படத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சவாலான படம்
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக்கின் இழப்பு மிகவும் பெரியது என்று தெரிவித்துள்ள அவர் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ளார். அதற்கு சிறப்பான படக்குழு அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உதயநிதி குறித்து மகிழ்ச்சி
இந்தப் படத்தின் முதல் பாகத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த 3வது பாகத்தையும் பிரம்மாண்டமான அளவில் வெளியிடுகிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுந்தர் சி, முதல் பாகத்தை பார்த்து அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று உதயநிதி நம்பிக்கை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
உதயநிதி பாராட்டு
அதேபோல இந்த 3வது பாகத்தையும் பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததாகவும் சுந்தர் சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகன் ஆர்யா குறித்தும் சுந்தர் சி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.