Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்தா நல்லா இருக்கும்.. சொல்கிறார் சுசீந்திரன்!
அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்த நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அடுத்த முதல்வராக அஜித்தும் கமலும் வந்த நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலையை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் பரபரப்பான கருத்துக்களை கூறி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடவுள் படம் சமயத்தில் நடிகர் அஜித்தையே அன்புச்செழியன் மிரட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அன்புச்செழியனால் நடிகர் அஜித், இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் கவுதமேனன் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார். இது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.
https://t.co/zw8aKkHVXZ pic.twitter.com/KxEBYz6OJw
— Suseenthiran (@dir_susee) November 23, 2017
அதாவது சினிமாத்துறையில் இருந்து அடுத்த முதல்வராக வர தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு தனது பதில் கமல் மற்றும் அஜித் என கூறியுள்ளார். அவர்கள் அடுத்த முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரனின் இந்த விருப்பம் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.