Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சுசிகணேசன் படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு...நீங்கள் தயாரா?
இயக்குநர் சுசி கணேசன் இயக்கும் 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் ஹீரோவாக நடக்க இளைஞர்களிடம் பொதுபோட்டி நடத்தப்படுகிறது. 2 நிமிட வீடியோ அனுப்பினால், அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் வருங்கால சூப்பர் ஸ்டார் சீரிஸ் மூலம் தேர்வு செய்யப்படுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
வந்தான்...ரூல்ஸ் பிரேக் பண்ணினான்...ரிபீட்டு...சொன்னபடியே செஞ்சுட்டீங்களே பாலா
ஹீரோ வாய்ப்புத்தருகிறார் சுசி கணேசன்...நீங்க ரெடியா
இயக்குநர் சுசி கணேசன் பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றியதால் திரையுலகில் நுழையும்போதே பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியவர். திரைத்துறைக்கு வரும்முன் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு பிரசாந்த், சினேகா நடிப்பில் விரும்புகிறேன் (2002) என்கிற படத்தை இயக்கினார்.
1980 ஆம் ஆண்டு மதுரை சம்பவ பின்னனியில் கதை
பின்னர் பிரசன்னா, கனிகாவை வைத்து 5 ஸ்டார் என்கிற படத்தையும், ஜீவனை கதாநாயகனாக போட்டு திருட்டுப் பயலே படத்தையும், பின்னர் விக்ரம், ஷ்ரேயா நடிப்பில் கந்தசாமி, அதன் பின்னர் திருட்டுப்பயலே 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1980 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
கிரைம் படமாக இருக்குமா?
இப்படத்திற்கு வஞ்சம் தீர்த்தாயடா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படம் குற்றப்பின்னனியைக் கொண்ட படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டு கதாநாயகர்கள் உள்ள படம் என்பதும், அதில் ஒருவரை வெளியிலிருந்து நேரடியாக நடிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வாய்ப்பைத்தேடும் இளைஞர்கள் உடனடியாக களத்தில் குதிக்கவும்.
ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, "குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதலின் படி, நீங்கள் நடித்த வீடியோவை , இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் www.4vmaxtv.com தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் , மரியாதைக்குரிய சேனலில் , மிக பிரமாண்டமாக நடக்கப்போகும் "வருங்கால சூப்பர் ஸ்டார் 2022"- ஷோவில் பங்கு பெறும் வாப்பைப் பெறுவீர்கள் .
2 நிமிட வீடியோவுடன் தயாராகுங்கள்
ஷோவின் இறுதியில் , வெற்றி பெறும் போட்டியாளர், 1980-களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் , சுசி கணேசனின் "வஞ்சம் தீர்த்தாயடா " திரைப்படத்தின் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்படுவீர்கள்" எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஆகையால் சினிமாவில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முயற்சிப்பவர்கள் உடனடியாக 2 நிமிட வீடியோ எடுத்து படக்குழுவை அணுகவும்.