Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கட்டப் பஞ்சாயத்தினால் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம்: ஆண் தேவதை இயக்குனர் தாமிரா
சென்னை: கட்டப் பஞ்சாயத்தினால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குனர் தாமிரா தெரிவித்துள்ளார்.
தாமிராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்த படம் ஆண் தேவதை. கடந்த 12 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான தாமிரா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் தாமிரா கூறியதாவது..
ஆண் தேவதை திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள் வந்தன. வினியோகஸ்தர்கள் சங்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.
3.20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரித்தேன், ஆனால் படம் விற்பனையானது ரூ. 20 லட்சத்திற்கு தான். இப்படத்தின் மூலம் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இங்கு சிறிய படங்களை பிழைக்க விடுவதில்லை. சிறு படங்களுக்காக வணிகம் நடந்தால் தான் சினிமா உயிர்ப்போடு இருக்கும்.
எங்கள் படத்திற்கு திரையரங்கங்கள் கிடைப்பதில் பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 130 திரையரங்குகளில் தான் படம் வெளியானது. மேலும் காட்சிகளும் சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். மாலைக் காட்சியில் தான் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் ஆண் தேவதைக்கு காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளே கிடைத்தன.
எவ்வளவு தான் படங்களுக்கு விளம்பரம் செய்தாலும், வாய்வழியாகப் பரப்பப்படும் தகவல்கள் மூலம் தான் படம் வெற்றியடைகிறது. சிறிய படங்களுக்கான பிரச்சனைகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வினியோகஸ்தர்கள் சங்கத்திலும் பேசுகிறார்கள். ஆனால் தீர்வு எட்டப்படவிலை என்றார்.