Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எதிரில் இருப்பவரை பேசவிட்டு ரசிப்பார் கலைஞர்! தங்கர் பச்சான்!
எதிரில் இருப்பவர்களை பேசவிட்டு ரசிப்பவர் கலைஞர் என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி எதிரில் இருப்பவர்களை பேசவிட்டு ரசிப்பார் என இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான், கலைஞருடன் உள்ள நெருக்கம் பற்றி கூறியுள்ளார்.
மிகப்பெரிய தலைவர் என்பதால் முன் அனுமதி வாங்க்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கலைஞரை பார்க்க வருபவர்களுக்கு கிடையாதாம். ஒருவருக்கு தேவை இருக்கிறது, அவசரமாக கலைஞரை சந்திக்க வேண்டும் என நினைத்தால் உடனே பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவாராம் கலைஞர்.
காலம் பொன்போன்றது என்பார்கள், அதை எப்போதும் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். சூரியன் உதிக்கும் முன்பே எழுந்தால்தான் சூரியனை விட வேகமாக ஓடமுடியும் என கூறி அதை செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் கலை, இலக்கியம் என வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாராம் கலைஞர்.
உலக இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கலைஞருக்கு எப்போது வெளிநாடுகளுக்குச் சென்றாலும், பல புத்தகங்களை வாங்கி வந்து அன்பு பரிசாக தங்கர் கொடுப்பாராம். அவற்றை வெகு சீக்கிரமாக படித்து முடித்துவிட்டு அடுத்து புத்தகங்கள் எப்போ எனக் கேட்பாராம் கலைஞர்.
அவர் பேசுவதை விட, எதிரிலிருப்பவர்களை நன்றாக பேசவிட்டு அதை உன்னிப்பாக கவனிப்பார் கலைஞர் எனக் கூறும் தங்கர் பச்சான், அவர் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படம் கலைஞருக்கு மிகவும் பிடித்த படம் எனக் கூறுகிறார். ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் பள்ளிக்கூடம் போல் இன்னுமொரு படம் எடுக்கவேண்டும் என கூறியுள்ளார் என கலைஞர் சொல்வாராம்.