Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அவரால என் உயிருக்கு ஆபத்து... நடிகை மஞ்சு வாரியர் புகார், இயக்குனர் அரெஸ்ட்!
திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியர் கூறிய புகாரை அடுத்து, மலையாள திரைப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.
மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார், ஒடியன் என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் ஸ்ரீகுமார் மீது, நடிகை மஞ்சு வாரியர், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார்.
அதில், ஒடியன் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் என்னை அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறேன் என்று கூறினார். இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மஞ்சு வாரியரின் புகாருக்கு ஸ்ரீகுமார் பதிலளித்திருந்தார். அதில், உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இன்றைய அப்டேட்: பொன்னியின் செல்வனில் நடிகர் தனுஷின் ஹீரோயின்!
நடிகை மஞ்சு வாரியரின் புகாரை அடுத்து, திருச்சூர் கிழக்கு போலீசார், இயக்குநர் ஸ்ரீகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஒடியன் படப்பிடிப்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தபோது, அனைவர் முன்பும் தன்னை ஸ்ரீகுமார் அவமானமாக நடத்தினார் என்றும் மஞ்சு வாரியர் புகாரில் கூறியிருந்தார்.
அந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது இருந்த, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சு வாரியரின் ஆடிட்டர் மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் அசிஸ்டென்ட் கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களின் வாக்குமூலங்களை பெற்ற போலீசார் அதன் அடிப்படையில் இயக்குனர் ஶ்ரீகுமாரிடம் நேற்று மாலை சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.