Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ரஜினியை மிரட்டுவதா? இயக்குநர் வீ சேகர் கண்டனம்!
என்ன கதை என்பதே தெரியாமல் காதில் விழுந்த தகவலை வைத்துக் கொண்டு ரஜினிக்கு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது என்று இயக்குநர் வீ சேகர் கூறியுள்ளார்.
வி.சேகரின் தனது 18 வது படமாக 'சரவணப் பொய்கை'யை இயக்கியுள்ளார். அவருடைய மகன் காரல் மார்க்ஸ் கதாநாயகனாகவும் அருந்ததி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். விவேக் மற்றும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
வி.சேகரின் திருவள்ளூர் கலைக்கூடம் சார்பில் இப்படம் தயாரித்துள்ளது.
'சரவணப் பொய்கை' படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நேற்று இப்படத்தின் பாடல் மற்றும் ஸ்டிக்கர்களை நெல்லை சந்திப்பில் உள்ள பேரின்பவிலாஸ் தியேட்டர் தொழிலாளர்கள் மத்தியில் வெளியிட்டனர்.
பின்னர் வி.சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பெரும்பாலும் குடும்பப் பாங்கான படங்களை எடுத்துள்ளேன். ஏற்கனவே 17 படங்களை இயக்கிவிட்டேன். என்னுடைய பெரும்பான்மை ரசிகர்கள் பெண்கள்தான். ஆனால் தற்போது அவர்கள் டி.வி. சீரியல்களில் மூழ்கி கிடக்கின்றனர். தியேட்டருக்கு கல்லூரி மாணவ, மாணவிகளும், தொழிலாளிகளும் மட்டுமே வந்து படம் பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது 18-வது படமாக 'சரவணப் பொய்கை'யை இயக்கிள்ளேன். தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இந்த படத்தில் காதல் கதையை கூறி உள்ளேன். என்னுடைய மகன் காரல் மார்க்ஸ் சினிமா தியேட்டரில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்துள்ளார். சினிமாவின் 'டிரண்ட்' மாறும்போது இயக்குநர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நடிகர் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. படத்தின் கதை என்னஎன்பதே தெரியாமல் காதில் விழுந்த தகவலை வைத்துக் கொண்டு ரஜினிக்கு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது," என்றார்.