Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ட்விட்டர் லைவில் பேசிய சிவகார்த்திகேயன்.. ஏடாகூடமாக கேள்வி கேட்ட வெங்கட் பிரபு!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரின்ஸ் இந்தப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதையொட்டி படக்குழு தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் ட்விட்டர் லைவில் பேசினார்.
முன்னதாக அவர் வெளியிட்ட பிரமோவில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரசிகர்களுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஜல புல ஜங்கு,பிம்பிலாக்கி பிலாப்பி போன்ற வரிகளுக்கான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் டாக்டர், டான் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து நாளைய தினம் பிரின்ஸ் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தீபாவளி ரிலீசாக சிவகார்த்திகேயனின் படம் வெளியாவது இதுதான் முதல் முறை.
ட்விட்டர் லைவில் சிவகார்த்திகேயன்
தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பிரமோஷனை முழுவீச்சில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு முடுக்கி விட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டர் லைவில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை ரசிகர்களிடையே பேசினார்.
வெங்கட் பிரபு கேள்வி
முன்னதாக இதுகுறித்து பிரமோவில் பேசிய அவர், ரசிகர்கள் தன்னிடம் கேள்வி கேட்க தயாராகுமாறு கேட்டுக் கொண்டார். இந்த லைவில் ரசிகர்கள் அவரிடம் சிறப்பான பல கேள்விகளை கேட்டனர். இந்த லைவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம் கேள்விகளை கேட்டிருந்தார்.
அனுதீப் டார்ச்சர் பண்ணாரா?
தானும் சிவகார்த்திகேயனும் இணையும் படத்தின் சூட்டிங்கை எப்போது துவங்கலாம் என்றும் நம்ம அனுதீப் உங்களை ஏதாவது டார்ச்சர் பண்ணாறா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய சிவகார்த்திகேயன், எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்றும் கதையை எப்போது சொல்வீங்க என்றும் கேட்டுள்ளார்.
பிரேம்ஜியுடன் என்ன ரோல்
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், அந்தப் படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து நடிக்கும் தனக்கு என்ன ரோல் என்றும் கேள்வி எழுப்பினார். பிரேம்ஜியை வைத்து இதன்மூலம் அவர் கலாய்த்துள்ளார். மேலும் இந்தக் கேள்வி மற்றும் சிவகார்த்திகேயன் பதிலால் இவர்களின் கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து அவரது மாவீரன், அயலான் படங்களும் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதையடுத்து கமல் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் ஒரு படம் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.