Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜித் படம் பார்த்துவிட்டு ட்ரீட் கொடுத்த விஜய்.. 9 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த இயக்குநர்!
சென்னை: அஜித்தின் மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகரான விஜய் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு ட்ரீட் கொடுத்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து வரும் நிலையிலும் இவரது ரசிகர்கள் எலியும் பூனையும் போல சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.
இதுக்கு எதுக்கு சேலை.. மொத்த முன்னழகையும் காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
மங்காத்தா படம்
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிகர் அஜித்தை சந்தித்தார் என்பது அவர்களின் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தெரியும்.
பிரியாணி
அப்போது நடிகர் விஜய் அஜித்துக்கு ஒரு அட்டகாசமான வாட்சை வழங்கியிருந்தார். அஜித் நடிகர் விஜய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறினார். இந்த விஷயங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பெரிய ட்ரீட்
அதாவது மங்காத்தா படம் வெளியான பிறகு நடிகர் விஜய் படத்தை பார்த்ததாகவும், படம் ரொம்பவே நல்லா இருப்பதாக பாராட்டியதாகவும் இயக்குநர் வெங்கட்பிரபு 9 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவித்துள்ளார். மேலும் மங்கத்தா படத்தை தொடர்ந்து விஜய் தன்னை வீட்டிற்கு டின்னருக்கு அழைத்து பெரிய ட்ரீட் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இம்ப்ரஸ் செய்ய
மேலும் தாங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்ததாகவும், கதை ரெடியானதும் தன்னிடம் சொல்லுமாறு விஜய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு நல்ல கதையுடன் அவரை இம்ப்ரஸ் செய்ய காத்திருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளர்.
சிவகாசி படத்தில்
மேலும் வித்தியாசமான கதையுடன் விரைவில் அவருடன் படம் பண்ணுவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு ஏற்கனவே நடிகர் அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் விஜயுடன் சிவகாசி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.