Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓடிடியில் சுதந்திரம் இல்லை.. இலக்கியத் திருவிழாவில் வெற்றிமாறன் குற்றச்சாட்டு!
சென்னை : இயக்குநர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வருகிறார்.
இவரது பல படங்கள் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
வெற்றிமாறன் சிறப்பான திரைப்படங்களை கொடுத்துவருவதோடு சமூக அக்கறையுடன் பொதுவெளியில் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
ரெண்டு படங்களுக்கும் வெற்றி கிடைக்கணும்.. துணிவுப்பட இயக்குநர் சொன்ன விஷயம்!
இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீசாக உள்ளது.
விடுதலை படம்
விடுதலை படம் சூரி, விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இலக்கியத் திருவிழாவில் வெற்றிமாறன் பேச்சு
மக்களுக்கு தேவையான கருத்துக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சென்னை இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய வெற்றி மாறன் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஓடிடி மற்றும் திரையரங்குகள் குறித்து தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
திரையரங்குகள் கொடுக்கும் சுதந்திரம்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது போலத்தான் தோன்றியதாகவும் ஆனால் திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் வேறு எந்த வடிவத்திலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம், ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஓடிடியில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம். இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது என்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்கும் கன்டிஷன்கள் போடப்படும் நிலையில், அதிலும் சுதந்திரம் பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவின் முழு சுதந்திரம்
இவ்வாறு கன்டிஷன்கள் போடப்படும்போது அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும் என்றும், அந்த நிலைக்கு போகக்கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.