Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன்.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நன்கொடை!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தமிழக அரசுக்கு 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு...புலம்பும் பிக்பாஸ் பிரபலம்
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் கோரிக்கை
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இயக்குநர் வெற்றிமாறன்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
ஏஆர் முருகதாஸ்
ஏற்கனவே நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
இயக்குநர் ஷங்கர்
நடிகர் அஜித் வங்கி பரிவர்த்தனை மூலம் 25 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். இயக்குநர் ஷங்கரும் 10 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.