Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்த தேதியில் நடக்கிறதா விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்? வெளியானது பரபரப்பான தகவல்
திருப்பதி : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் எதிர்காலமே.. டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த சமுத்திரகனி!

விக்னேஷ் சிவன் -நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோதே இவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது. இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நானும் ரவுடிதான் படம்
நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இதையடுத்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை விநியோகித்து வருகின்றனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை நயன்தாரா வெளிப்படுத்தியிருந்தார்.

ரிலீசுக்கு பின்பு திருமணம்
முன்னதாக பேட்டியொன்றில், தானும் நயன்தாராவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ரிலீஸ் செய்த பின்பு திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகியுள்ள நிலையில் அவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை தொடர்ந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர். திருப்பதிக்கும் அவர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் திருப்பதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

ஜூன் 9ல் திருமணம்?
இதனிடையே வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டியே இருவரும் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு முறை திருப்பதி சென்றுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான ஜோடி
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கோலிவுட்டின் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.