Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காத்துவாக்குல ரெண்டு காதல் கதைக்கும்..எங்க காதல் கதைக்கும் தொடர்பு இருக்கு..விக்கி சொன்ன பிளாஷ்பேக்!
சென்னை : இயக்குர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் கதைக்கும், எங்க காதலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
காத்து வாக்குல ரெண்டு காதல், திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவதார் 2 டைட்டில் அறிவிச்சாச்சு...பேருலையே எப்படி மிரட்டி இருக்காங்க பாருங்க
காத்துவாக்குல ரெண்டு காதல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
டஃப் கொடுத்த சமந்தா
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமந்தா நடித்துள்ளதாக ரசிகர்கள் சமந்தாவை பெரிதும் புகழ்ந்து வருகின்றனர்.
காதல் மலர்ந்த போது
இந்நிலையில், விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டியில், காத்துவாக்குல ரெண்டு காதல் கதைக்கும், எங்க காதல் கதைக்கும் தொடர்பு இருக்கு என்று நயனுடனான காதல் குறித்து பேசினார். இதில், நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும்போதே நயனும் நானும் டின்னர் சென்றிருந்தோம். அப்போதுதான் எங்கள் காதல் மலர்ந்த புதுசு என்றார்.
தள்ளிப்போனது
அப்போது, நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த இந்த கதையை நயனிடம் சொன்னேன். மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் வரும் கண்மணி ரோலில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டதாகவும். இந்த படத்தை 2016ம் ஆண்டே பண்ண வேண்டிய படம் ஆனால் அடுத்தடுத்து கமிட்மெண்ட்டுகள் இருந்ததால் தள்ளிப்போனது என்றார்.
கனவு படம்
எங்கள் இருவரின் திருமணத்திற்கு முன்பாக ஒரு நல்லபடத்தை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். எங்களின் நீண்ட நாள் கனவு படம் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் அதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நேர்காணல் சோஷியல் மீடியாவில் டிராண்டாகி வருகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!