Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நயன்தாராவுடன் காத்துவாக்குல காதல் செய்யும் வீடியோவை பதிவிட்டு... தங்கமே என உருகிய விக்னேஷ் சிவன்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்து, அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாங்கும் சம்பளம்.. ஆத்தாடி ஹீரோயினை மிஞ்சிடுவாங்க போல!
காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் முக்கோண காதல் கதை மையமாக கொள்ளப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாராவை விட சமந்தா நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திருப்பதியில் தரிசனம்
விஜய் சேதுதி மற்றும் நயன்தாரா வழக்கம்போல சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். இருவர்மீதும் ஏற்படும் காதலை விட முடியாமல் தவிக்கும் கேரக்டரில் விஜய் சேதுபதி சிறப்பான நடித்திருந்தார். இந்நிலையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் நேற்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
காத்து வாக்குல காதல்
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் காத்து வாக்குல காதல் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மலை மற்றும் அருவி காணப்படும் இடத்தில் இருவரும் நடந்து செல்லும்படியாக அந்த வீடியோ காணப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக நயன்தாரா பின்புறத்தில் தட்டிக் கொடுக்கிறார்.
தங்கமே என உருக்கம்
மேலும் தங்கமே என்று நயன்தாராவை அன்புடன் கேப்ஷனில் அழைக்கிறார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் தூண் போல தனக்கு வலிமையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய துணையாக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கண்மணி என அழைப்பு
இத்தகைய ஆதரவால் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இந்தப் படம் வெளியாக காரணமாக இருந்த நயன்தாராவை கண்மணி என்று அழைத்து அவர் உருக்கம் தெரிவித்துள்ளார். மீண்டும் நயன்தாராவை இயக்கி அவரது பெஸ்ட்டை கொடுக்க வைத்ததற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
இனிமையான அனுபவம்
நயன்தாராவுடன் பணிபுரிவது எப்போதுமே மனதிற்கு இனிமையான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருவரும் திட்டமிட்டபடி காதம்பரி கேரக்டரை போலவே கண்மணியும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிபிபட்டுள்ளார். மேலும் லவ் மற்றும் தேங்க்யூ என்றும் அந்தப் பதிவில் நயன்தாராவிடம் கூறியுள்ளார்.
சமந்தாவிற்கு பிறந்தநாள் பரிசு
இந்த வீடியோவுடன் படத்தில் நயன்தாராவின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். இதேபோல சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவரது புகைப்படங்களை இணைத்துள்ள விக்னேஷ் சிவன், அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் பரிசு (படத்தின் ரிலீஸ்) பிடித்திருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.