Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!
சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது.
தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை மீடியா அம்பலமாக்கியது.
இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.
கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து.
இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் சூழ இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய்.
இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.
யார் யார்..
இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, லிஸி ப்ரியதர்ஷன், இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பிலிம்சேம்பர் கல்யாண், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, நக்கீரன் கோபால் உள்பட பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.