Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டோலிவுட்டுக்கு படையெடுக்கும் தமிழ் இயக்குநர்கள்.. தெலுங்குக்கு போகும் மேலும் ஒரு தமிழ் இயக்குநர்!
சென்னை: பிரபல அஜித் பட இயக்குநர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தனது முதல் படம் விஷ்ணு வர்தனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
ஆனால் தனது இரண்டாவது படத்தில் சொல்லி அடித்தார் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஆர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தை இயக்கினார்.
சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் முரளியின் இரண்டாவது மகன்.. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாகிறார்!
தொடர்ந்து பல படங்கள்
இந்த படம் செம ஹிட்டானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம் என பல வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.
தமிழில் கடைசியாக ஃபிங்கர்டிப்
தமிழில் கடைசியாக ஃபிங்கர்டிப் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து முதல் முறையாக இந்தி படத்தை இயக்கினார் விஷ்ணு வர்தன். ஷெர்ஷா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார்.
அஞ்சலி படத்தில் சிறு பையனாக
ஓடிடியில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு வர்தன் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார். 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் சிறு பையனாக நடித்தார் விஷ்ணு வர்தன்.
கடைசியாக யட்சன் படம்
அதனை தொடர்ந்து சத்ரியன் படத்தில் இளம் வயது பன்னீர்செல்வமாக நடித்தார். இருவர் படத்தில் தமிழ்ச் செல்வன் மகனாக நடித்தார். 2015ஆம் ஆண்டு வெளியான இசை படத்திலும் நடித்த விஷ்ணு வர்தன், அதே ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான யட்சன் படத்திலும் நடித்திருந்தார்.
இது முதல் முறையல்ல
இந்நிலையில் விஷ்ணு வர்தன், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கும் தெலுங்கு படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு வர்தன் தெலுங்கு படத்தை இயக்குவது ஒன்றும் இது முதல் முறையல்ல.
முன்னணி இயக்குநர்களை தொடர்ந்து
ஏற்கனவே பவன் கல்யாணை வைத்து பஞ்சா என்ற படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணு வர்தன். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கவுள்ளார். இதேபோல் இயக்குநர் லிங்குசாமியும் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கில் இயக்கவுள்ளார். அந்த வகையில் தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தனும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.