Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எழுத்தாளர் இல்லாததால் தவிக்கும் இயக்குநர்கள்!
Recommended Video
திரைக்கதை திலகம் பாக்யராஜ் ஒருமுறை சொன்னார் 'நான் ஏதோ ஆர்வத்துல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு டைட்டில்ல போட ஆரம்பிச்சேன். பின்னாடி வந்தவங்கள்லாம் அதை எடுத்துகிட்டு தானே எல்லாத்தையும் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்காங்க... அது தப்பு. ரைட்டரை பக்கத்துல வெச்சுக்கறது தான் நல்லது,' என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்.
நல்ல எழுத்தாளர்களை அருகில் வைத்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி அதனை இயக்கிய வரையிலும் வெற்றிபெற்ற இயக்குநர்கள் தானே இறங்கி தோற்றுப்போய் தவிக்கிறார்கள்.
மணிரத்னம், ஷங்கர் இருவரின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா. சுஜாதா மறைவிற்கு பிறகு நாவல், பத்திரிகை, சினிமா என எல்லா தளங்களிலுமே வெற்றிடம் ஏற்பட்டது. மணிரத்னமும் ஷங்கரும் இன்னும் தடுமாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
அதேபோல் தான் சுசீந்திரனும். பாண்டிய நாடு வரை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உடன் இருந்தார். அவர் விலகிய பின்னர் நெஞ்சில் துணிவிருந்தால் வரை அடிதான் வாங்குகிறார்.
இளம் இயக்குநர்களுக்கு இது ஒரு பாடம். இனியாவது ஒரு நல்ல எழுத்தாளரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
"கதாசிரியர் என்ற இனமே அழிந்து போனது கவலையாக உள்ளது. இப்போதுள்ளவர்கள் கதை வைத்திருந்தால், அதை தானே இயக்கி நடிக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு காரணம் கதாசிரியர்களுக்கான ஊதியம் குறைவு. நல்ல சம்பளம் கொடுத்து கதையை வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
ரெண்டு எழுத்தாளர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கதை என்று தன் பெயரை போட்டுக்கொள்ளும் இயக்குநர் கூட காப்பி அடித்துதான் கதையை படத்தில் வைக்கிறார். விஷயமே இல்லை... பேரு வாங்க மட்டும் ஆசை?
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி