Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்
சென்னை: இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்புவதாக மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர் மொட்டை ராஜேந்திரன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது தான் ஒரு பெயர் கிடைத்துள்ளது. நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும் அசத்திவிடுவார்.
குணசித்திர வேடங்களிலும் ஜொலித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.
கூப்பிடு ராஜேந்திரனை
காமெடியா, வில்லத்தனமா, குணச்சித்திர வேடமா கூப்பிடு நம்ம மொட்டை ராஜேந்திரனை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.
ரெமோ
சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வரும் ரெமோ படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரெமோ ஒரு சுவாரஸ்யமான படம். அதில் நான் சிறு வேடத்தில் வருகிறேன் என்றார்.
சிம்பு படம்
சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நகைச்சுவை நடிகராக வருகிறேன். இயக்குனர்கள் என்னை காமெடியனாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வில்லன்
நான் என் திரை பயணத்தை வில்லன் கதாபாத்திரங்களில் துவங்கினாலும் நான் தற்போது காமெடியன் ஆகிவிட்டேன். இது எனக்கு பிடித்துள்ளது என்று மனம் திறந்துள்ளார் ராஜேந்திரன்.