Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இங்கயுமாடா செல்பி எடுப்பீங்க... நொந்து ‘நூடுல்ஸ்’ ஆன அமிதாப்!
மும்பை: இறந்தவரை தகனம் செய்யும் இடத்திலும் சிலர் தன்னுடன் செல்பி எடுத்தது கேவலமான செயல் என நடிகர் அமிதாப்பச்சன் கவலை தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப், சமீபத்தில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்தார். அங்கு அமிதாப்பைக் கண்ட சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர்.
துக்ககரமான நிகழ்ச்சியில் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், இவ்வாறு நடந்து கொண்டவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார் அமிதாப்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உணர்வுகள்...
இறந்தவர்களுக்கும், உயிரோடு இருப்பவர்களுக்குமான உணர்வுகளையும் கூட சில நேரங்களில் சரிவர புரிந்து கொள்வதில்லை.
இறுதிச் சடங்கு...
என்னுடைய நெருங்கிய நண்பர் திடீரென மரணமடைந்து விட்டார். அன்னாரது இறுதிச்சடங்கிற்காக நான் டெல்லிக்கு சென்று இருந்தேன்.
அதிருப்தி...
ஆனால், அங்கேயும் மக்கள் தங்களுடைய மொபைலில் படங்களையும், செல்பி படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தனர். இது எனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி மரியாதை...
மரணமடைந்தவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை கூட அவர்கள் செலுத்தவில்லை' என இவ்வாறு அதில் அவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.