Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தற்கொலை செய்துகொண்ட.. சுஷாந்த் சிங் மானேஜர் திஷா உடல் நிர்வாணமாக கிடந்ததா? போலீசார் விளக்கம்!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான் உடல் நிர்வாணமாக இருந்ததா என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாசா கொடுத்த பரிசு.. நட்சத்திரத்துக்குப் பிரபல நடிகையின் பெயர்.. எக்கச்சக்க மகிழ்ச்சியில் ஹீரோயின்!
திஷா சாலியான்
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன் அதாவது ஜூன் 8 ஆம் தேதி அவரது மானேஜர் திஷா சாலியான் தற்கொலை செய்துகொண்டார். அவர் மும்பை மலாடு பகுதியில் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுவும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சுஷாந்த் சிங்
அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். இரங்கல் தெரிவித்த அடுத்த வாரமே சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதால், அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று பாலிவுட்டில் கூறப்பட்டது.
நிர்வாணமாக
ஆனால், இரு தற்கொலைக்கும் சம்பந்தமே இல்லை என மும்பை போலீசார் மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், திஷா சலியான் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்த போது அவர் உடல் நிர்வாணமாக இருந்தது என்றும் அவர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்ததாகவும் பரபரப்பு தகவல் பரவியது. திஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
|
தவறான தகவல்
இந்த தகவல் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை மும்பை போலீசார் மறுத்துள்ளனர். திஷாவின் உடல் நிர்வாணமாக கண்டுபிடிக்கப் படவில்லை. அது தவறான தகவல் என்று மும்பை இணை போலீஸ் கமிஷனர் விஷால் தாகூர் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்றனர். அவரது பெற்றோர் முன்னிலையிலேயே உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
முன்னதாக, திஷா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபின் கொல்லப்பட்டு வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று மும்பையில் சில அரசியல்வாதிகள் தெரிவித்து இருந்தனர். இதையும் திஷா சாலியானின் பெற்றோர் மறுத்துள்ளனர். அதோடு, திஷா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்பட்ட தகவலையும் திஷாவின் தந்தை சதீஷ் மறுத்துள்ளார்.