Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெறி செங்கல்பட்டு சிக்கல்... திருப்பூர் சுப்பிரமணியத்தின் 'வேலை'யா?
தெறி படத்தின் செங்கல்பட்டு ஏரியா விற்பனையில் சிக்கல் நீடிக்கக் காரணமே திருப்பூர் சுப்பிரமணியம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் சுப்பிரமணியன் விநியோகஸ்தர் மட்டுமல்ல, தியேட்டர் உரிமையாளரும்கூட.
கோவை மற்றும் திருப்பூரில் இவருக்கு திரையரங்குகள் உள்ளன. ரஜினி நடித்த லிங்கா பட பிரச்சினையில் இவர் தலைதான் அதிகமாக உருண்டது.
தனது அரங்குகளில் தெறி படத்தைத் திரையிட எம்ஜி அடிப்படையில் தாணு சொன்ன விலையைத் தர திருப்பூர் சுப்பிரமணியன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தாணு சொல்லும் விலைக்கு யாரும் படத்தை வாங்கக் கூடாது என சுப்பிரமணியன்தான் செங்கல்பட்டு விநியோகஸ்தர்களையும் தூண்டிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் யாருடைய நெருக்கடிக்கும் பணியப் போவதில்லை என்று உறுதியுடன் இருக்கும் தாணு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் சொந்தமாகவே தெறி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம்.