Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காஷ்மீரில் என் மாமனார் மாமியார் என்ன செய்யறாங்களோ... ஊர்மிளா மாடோண்கர் பதற்றம்
சென்னை: இந்திய அரசியல் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது, சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்று நடிகை ஊர்மிளா மாடோண்கர் குற்றம் சாட்டியுள்ளார். அங்கு கஷ்டப்படும் தனது மாமனார் மாமியாருடன் பேச முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் கண்டனம் தெரிவித்து குறை கூறியும், பலர் தங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகையாக அனைவரையும் கவர்ந்து இன்று அரசியல்வாதியாக மாறியிருக்கும் ஊர்மிளா மாடோண்கரும் இந்த பிரச்சனை குறித்து தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளை பறித்து மத்திய அரசின் உத்தரவின்படி அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வைரல் வீடியோவால் 8 ஆண்டுகள் கழித்து பாடகியை சந்தித்த மகள்
அதன் பின்னர் அந்த மாநிலம் முழுவதும் பதட்டமான சூழலே நிலவி வந்தது. பாதுகாப்பு கருதி, அரசியல் தலைவர்கள் அங்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன,
அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் பதற்றத்தோடு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஆனால், தற்போது இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகையும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மாடோண்கர், தனது கணவரின் பெற்றோர் காஷ்மீரில் வசிப்பதாகவும் அவர்களை கடந்த 22 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மிகவும் ஆவேசத்துடன் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததன் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அங்கே வசிக்கும் எனது மாமனார் மற்றும் மாமியாரை கடந்த 22 நாட்களாக என்னாலும், எனது கணவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர்கள் நீரிழிவு நோயாளிகள், அவர்களுக்கு போதுமான மருந்துகள் உள்ளதா இல்லையா என்பது கூட தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார். மத்திய அரசு இதற்கு ஒரு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் ஊர்மிளா மாடோண்கர்.