Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நயன் ரீல் கலெக்டரான நேரத்தில் நடிகையாகியுள்ள ரியல் கலெக்டர் திவ்யா ஐயர் ஐஏஎஸ் #எக்ஸ்க்ளூசிவ்
Recommended Video
சென்னை: திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா ஐயர் மலையாள படம் மூலம் நடிகையாகியுள்ளார்.
பென்னி ஆசம்சா இயக்கியுள்ள எலிஅம்மச்சிடே ஆத்யதே கிறிஸ்துமஸ் மலையாள படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் மூலம் நடிகையாகியுள்ளார் திருவனந்தபுரம் சப் கலெக்டர் திவ்யா ஐயர் ஐஏஎஸ். அவர் ஒரு டாக்டரும் கூட. சிஎம்சி வேலூரில் தான் மருத்துவம் படித்துள்ளார்.
திவ்யா ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,(படம் தொடர்பாக தமிழ் மீடியாவுக்கு அவர் அளித்துள்ள முதல் பேட்டி. திவ்யா சுத்தத் தமிழில் பேட்டி அளித்தார்.)
முதியோர்கள்
நான் கோட்டயத்தில் பணியாற்றியபோது இயக்குனர் என்னை அணுகி நடிக்குமாறு கேட்டார். முதியோர் இல்லம் பற்றிய படம் இது. அது தான் என்னை ஈர்த்தது. முதியோர்கள் நம் சமூகத்தில் எப்படி கஷ்டப்படுகிறார்கள், எப்படி பிள்ளைகள் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை பற்றிய படம்.
ஐஏஎஸ் அதிகாரி
இது கமர்ஷியல் படம் அல்ல. சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் படம். அதனால் தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் முறையாக அரசிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்தில் நடித்தேன்.
அனுமதி
ஐஏஎஸ் அதிகாரி படத்தில் நடிக்கக் கூடாது என்று சட்டம் இல்லை. ஆனால் அனுமதி வாங்கிவிட்டு நடிக்கலாம். நான் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளேன்.
அறம்
நான் மலையாளம், தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். கடைசியாக நான் பார்த்த தமிழ் படம் மெர்சல். அதற்கு முன்பு விக்ரம் வேதா பார்த்தேன். அறம் படம் பார்க்கவில்லை ஆனால் அது ரொம்ப நல்ல படம் என்று கேள்விப்பட்டேன்.
டாக்டர்கள்
மெர்சல் படம் ரொம்ப பிடித்திருந்தது. படத்தில் டாக்டர்களை பற்றி தப்பாக எதுவும் பேசவில்லை. அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளார். படத்தை பார்த்து அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்டர்கள் மாறினால் நல்லது தானே. தமிழ் படம், மலையாள படம் என்று இல்லை. எந்த படமாக இருந்தாலும் சமூக கருத்து தெரிவிக்கும் படமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் திவ்யா.