Don't Miss!
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் வெளியீடு - எம்எஸ்வி, இளையராஜா பங்கேற்கிறார்கள்!
மக்கள் கவிஞர் என்று கொண்டாடப்படும், அமர கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் இன்று சென்னையில் வெளியாகிறது.
இந்த ஆவணப் படத்தை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா வெளியிட, பட்டுக்கோட்டையார் மனைவி கவுரம்மாள் கல்யாணசுந்தரம் பெற்றுக் கொள்கிறார்.
தனது 29 வயதிலேயே மரணத்தைத் தழுவியவர் பட்டுக்கோட்டையார் எனப்படும் கல்யாணசுந்தரம். பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்.
வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும்தான் தமிழ் சினிமாவில் அவர் பாடல்கள் எழுதினார். ஆனால் எழுதிய ஒவ்வொரு பாடலும் தமிழ் சினிமாவின் வைரங்களாக ஜொலித்தன. இவர் மாதிரி எளிய, ஆனால் கருத்தாழமிக்க பாடல்களைத் தந்தவர் யாருமில்லை என கண்ணதாசனும் வாலியும் கொண்டாடுவார்கள்.
அமரர் எம்ஜிஆரின் 7 சூப்பர் ஹிட் படங்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜிக்கு 11 படங்களுக்கும் பாடல்கள் புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.
1959-ல் மைக்ரேன் எனப்படும் கடுமையான நோயில் சிக்குண்டு, இறந்தார் கல்யாணசுந்தரம். ஆனால் அவர் மரணித்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவரது பாடல்கள் இன்னமும் வீறு கொண்டு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பட்டுக்கோட்டையார் பற்றிய முழுமையான ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனை வெளியிடும் முயற்சியில் பெரும் ஊக்கமும் ஆர்வமும் காட்டியவர் இசைஞானி இளையராஜா.
இன்று மாலை வாணி மகாலில் நடக்கும் நிகச்சியில் அவரும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனும் இந்த ஆவணப்படத்தை வெளியிட, பட்டுக்கோட்டையாரின் மனைவி கவுரவம்மாள் கல்யாணசுந்தரம், ஆவணப்படத்தை பெற்றுக் கொள்கிறார். பட்டுக்கோட்டயாரின் வாரிசு மற்றும் உறவினர்கள், திரையுலகினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!