Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா?... நாளை தெரியும்!
கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது நாளை தெரியும்.
Recommended Video
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை வெளியாகிறது.
நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோலமாவு கோகிலா. அறிமுக இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்காக அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி' பாடல் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது.
யோகிபாவுவின் காதலை நயன்தாரா ஏற்றாரா இல்லையா என்று இணைய தளங்களில் விவாதங்கள் நடந்தன. இந்த பாடல் வைரலானதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்ற கேள்வி பல இடங்களிலும் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ரசிகர்களின் சார்பாக படத்தின் இயக்குனர் நெல்சனிடம் கேள்விக்கான விடையை கேட்டபோது, "இதுதான் நான் 'கல்யாண வயசு' பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
கோலமாவு கோகிலா படம் எதை பற்றியது என இயக்குனர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, "கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்" என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த கோலாமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.