Just In
- just now
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- 17 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 26 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 33 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
Don't Miss!
- News
நடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பஞ்ச் வசனம் பேசும் நாய்.. எங்க காட்டுல மழை கலாட்டா!
குள்ளநரிக் கூட்டம் என்ற எளிமையான, இனிமையான படம் தந்த ஸ்ரீபாலாஜி, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் எங்க காட்டுல மழை.
மிதுன் மகேஸ்வரன் - ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் அப்புக்குட்டிக்கு முக்கிய வேடம். சாம்ஸ், அருள்தாஸ், மதுமிதா உள்ளிட்டோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் வருகிறார்கள். ஸ்ரீவிஜய் இசையமைத்துள்ளார்.
படத்தை முழுமையாக முடித்த பிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற முடிவிலிருந்த இயக்குநர் ஸ்ரீபாலாஜி, நேற்று சந்தித்தார்.

அவரிடம் 'ஏன் இத்தனை ஆண்டு இடைவெளி?' என்றோம்.
"நல்ல கதை அமைய வேண்டியிருந்தது. அதைவிட முக்கியம் நல்ல தயாரிப்பாளர் கிடைப்பது. இதுதான் உண்மையான காரணம்," என்றார் ஸ்ரீபாலாஜி.

என்ன கதை?
"சென்னையில் எந்த வேலைவெட்டிக்கும் போகாத நாயகனும், ஊரிலிருந்து சென்னைக்கு வந்த அப்புக்குட்டியும் நண்பர்களாகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சென்னைக்கு வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. இதுபோல் சென்னையில் ஒரு வீட்டில் சோறு போட முடியாமல் ஒரு நாயை துரத்தி விடுகிறார்கள். அந்த நாயும் இவர்களுடன் சேர்ந்துவிடுகிறது. இவர்கள் மூன்று பேரும் மையமாக வைத்து நகர்கிறது படத்தின் கதை".

நாய்க்கு என்ன வேலை இந்தப் படத்தில்?
இந்த நாய்க்கு பதில் ஒரு நடிகரையே கூட நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் அதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. அதனால் நடிகருக்கு பதில் நாய். சில காட்சிகளில் நாயகன், மற்றும் அப்புக்குட்டி பேசும் வசனங்களுக்கு நாய் ஒரு பஞ்ச் வசனம் கொடுப்பது போல காட்சிகள் எடுத்துள்ளோம். இது குழந்தைகள், மற்றும் குடும்ப ஆடியன்ஸைக் கவரும் அல்லவா...

நாய்க்கு டப்பிங் உண்டா?
ஆமாம்... பிரபல சின்னத்திரை நடிகர் ஆதவன் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவர் மிகவும் ஈடுபாட்டோடு அந்த வேலையைச் செய்தார்.

நாயை நடிக்க வைத்த அனுபவம்...
அதை ஏன் கேட்கிறீர்கள்... இருப்பதிலேயே கடினமான வேலை நாயை நடிக்க வைப்பதுதான். ஒரு ஹீரோயினுக்குத் தர வேண்டிய முக்கியத்துவம், செலவு இந்த நாய்க்கு. அதற்காக ஏசி கார், சாப்பிட ஐஸ்கிரீம், சிக்கன், பைவ் ஸ்டார் சாக்லேட்...

தலைப்புக்கு ஏதும் விசேஷ காரணமிருக்கா...
காரணமே இல்லீங்க. முதல் படத்திலாவது குள்ளநரித்தனமாக ஒரு வேலை செய்தார்கள். அதனால் அப்படி வைத்தேன். இந்தப் படத்துக்கு ரைமிங்காக ஒரு தலைப்பு யோசித்தேன். இந்தத் தலைப்பு அமைந்தது. சொல்லும்போதே பாஸிடிவாக உள்ளதல்லவா...