Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எந்த வதந்தியையும் நம்பாதீங்க.. போயிட்டு சூப்பரா திரும்பி வருவேன்.. டி ராஜேந்தர் பேட்டி!
சென்னை: மேல் சிகிச்சைக்காக நடிகர் டி.. ராஜேந்தர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
விமான நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பாக சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டி. ராஜேந்தர் தன்னைப் பற்றி உலாவும் எந்தவொரு தவறான வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தான் நலமுடன் சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு வெளிநாட்டில் தனது அப்பாவின் சிகிச்சைக்கான பண்களை மேற்கொள்ள 10 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா சென்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் டி. ராஜேந்தர்.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்!
தன்னைப் பற்றிய வதந்தி
சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் இன்றைக்குத்தான் போகிறேன் அமெரிக்கா ஆனால் எபோதோ போய்விட்டார். எங்கேயோ போய்விட்டார் என்று எழுதினார்கள் சேதி. பலர் செய்த பிரார்த்தனை அவர்கள் செய்த ஆராதனை அதனால் இங்கு நிற்கிறேன்." எனக் கூறினார்.
அத்தனை பேருக்கும் நன்றி
"எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய ரசிகர்கள், சிம்புவின் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு உதவி செய்த பச்சமுத்து வேந்தர், கம்ல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நான் நல்லா இருக்கணும் என்று எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், அபிமானிகள் அனைவருக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறேனோ தெரியாது." என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
ராமசந்திரா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைவருமே அன்புடன் என்னை கவனித்துக் கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின், எங்க அண்ணி துர்கா ஸ்டாலின் என அனைவருமே என்னை சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.
எதையும் நம்பாதீங்க
பிரபலங்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றாலே, அவர்கள் மறைந்து விட்டதாக சில விஷமிகள் வாட்ஸப்பில் பகிர்ந்து வருகின்றனர். அதையெல்லாம் பார்த்து ரொம்பவே மனம் நொந்து போன நிலையில், தான், "என் சொந்தமெல்லாம் என் கூடவே இருந்தது, அதையெல்லாம் மீறி என் மீது அன்பு காட்டிய ரசிகர்கள், உலக மக்கள் ஈழத்து மக்கள் இருக்கும்போது என்னைப்பற்றி வரும் எந்த வதந்தியும் நம்பாதீர்கள்." என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
தாடி வச்சிருக்கேன் மூடி வச்சதில்லை
"நான் முகத்தில் தான் வாச்சிருக்கேன் தாடி, என் வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை மூடி" சீக்கிரமே சிகிச்சை முடித்து விட்டு சென்னை திரும்பி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பேன் எனக் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார் டி. ராஜேந்தர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!