Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வேணாம் வேணாம்... நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்த வேண்டாம்! - நாசர்
சகுனி படத்தின் வெற்றி அறிவிப்பு பிரஸ்மீட்டில் பங்கேற்ற போது, நடிகரும் இயக்குநருமான மனோபாலா, "கார்த்தி அரசியலுக்கு வரவேண்டும். சிவகுமார் ஒரு மகனை நாட்டுக்கும் இன்னொரு மகனை வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார் என்றார்.
கமலா தியேட்டர் உரிமையாளர் வள்ளியப்பன், சகுனி அரசியல் படம். அரசியல் மீது ஆர்வம் இருப்பதால்தான் கார்த்தி அரசியல் படத்தில் நடித்திருக்கிறார் என்றார்.
உடனே கார்த்தி குறுக்கிட்டு, ஏங்க...நல்லாத்தானே போயிட்டிருக்கு. ஏன் இப்படி? என்றார்.
அடுத்து வந்த நாசர், அனைவரது கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இப்படிச் சொன்னார்:
"சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி பெற்றால், உடனே முதலமைச்சர் கனவு வந்து விடுகிறது. கார்த்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூபம் போடாதீர்கள்... நடிகர்களுக்கு அரசியல் வேண்டாம். அவரவர் வேலையைச் சரியாக செய்தால் போதும்," என்று கேட்டுக்கொண்டார்.