Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!- காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்வதற்கு பெருநகரக் காவல் துறை சார்பில் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திரையரங்குகளில் திரைப்படம் காண வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூலித்தால் தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறைச் சட்டப்படி குற்றமாகும்.
இதைத் தடுக்கும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக வரும் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனிப் படையில் காவல் துறை உதவி ஆணையர்கள், வணிகவரித் துறை அதிகாரிகள், கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். மேலும், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனே பொதுமக்கள், சென்னை பெருநகரக் காவல் துறையை 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.