யாருக்கு ஓட்டு போடணும், எப்படி போடக் கூடாது: பார்த்திபன் சொல்வதை கேளுங்க
Recommended Video
சென்னை: தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பரிந்துரை செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு ஓட்டு போடுங்க என்று பல்வேறு கட்சியினர் கூறி வரும் நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சுவாரஸ்யமான ட்வீட்டுகள் போட்டுள்ளார்.
வாக்களிப்பது குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பார்த்திபன்
மேலிடத்தில் பணம் வாங்காத கட்சிக்கு வாக்களிப்போம் என்று பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு தேர்தல் என்றால் பணம் தேத்துதல் என்கிறார் அவர். தில்லு தான் மிஸ்டர் பார்த்திபன்.
மக்கள்
உங்கள் வாக்குகளை காசுக்கு விற்க வேண்டாம் என்கிறார் பார்த்திபன்.
ஓட்டு
தைத்திருநாள் முதல் நாள் போகி என்ற பெயரில் பழையன கழியப்படும்.தேர்தல் திருநாளிலும் பழைய
வாக்குறுதி-களை-ந்து,
புதிய வாக்கு உறுதி காண
அப்பொத்தானை நோக்கி விரல் நீட்டுவோம்! என்கிறார் பார்த்திபன்.
கொளுத்திப் போடு
காசா, பணமா சும்மா கொளுத்திப் போடுவோம்.


Click it and Unblock the Notifications











