ப்ளீஸ் துளசி, என்னை அங்கிள்னு கூப்பிட்டுறாத... கெஞ்சும் ஜீவா

Dont call me uncle jeeva recommend thulasi
சென்னை: 'யான்' பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , 'இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான்' என படத்தின் ஹீரோ ஜீவா கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், இப்போது தயாரிப்பில் இருக்கும் "நீதானே என் பொன் வசந்தம்" ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

இதே நிறுவனம் அடுத்து, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, யான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதாநாயகி துளசி. இதுபோக, நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மும்பையை சேர்ந்த ஒருவர் வில்லனாக நடிக்கிறார். இவர் தவிர, பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது.

இன்று காலை 10.30 மணி அளவில் 'யான்' பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.இதில் 'யான்'பட தயாரிப்பு குழுவினர் மற்றும் ஜீவா,துளசி நாயர் கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது பேசிய படத்தின் டைரக்டர் ரவி.கே.சந்திரன், யான் படத்தின் கதை முழுக்க முழுக்க அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் செய்திகள் படத்தின் கதை. இப்படத்தில் நடிக்க, நடிகை தேடிய போது, டைரக்டர் மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தான் துளசியை சிபாரிசு செய்தனர். அவர்கள் கூறியதை தொடர்ந்து துளசியை, ஜீவாவுக்கு ஜோடியாக்கினேன். அவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா பேசும்போது, இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான். காரணம், என் வயதில் பாதி வயது தான் துளசிக்கு. வயதில் தான் பாதி, ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் என்னை மிஞ்சும் அளவுக்கு நடிக்கிறார்.

அங்கிள் என்று நான் சொல்லக்கூடாது என்றதும், துளசி என்னை ஜீவா ஜி என்று அழைத்தார், இதற்கு நீ பேசாமல் என்னை அங்கிள் என்று அழைத்திருக்கலாம்', என்றேன்.

மேலும் அக்கா-தங்கை இருவருடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, கார்த்திகாவிடம் நடிப்பு, டான்ஸ் என்று எல்லாமும் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகல என்று இருப்பார். அவர் ஒரு இண்டர்நேஷனல் நடிகை. துளசியை பொறுத்தமட்டில் நம்மூரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும். அவர் மணிரத்னத்தின் பள்ளியில் இருந்து வந்தால் நடிப்பதற்கு முன்பு தன்னை தயார்படுத்தி தான் நடிப்பார்' ,இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X