Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோக்கம் ஒன்னுதான்..ஆனாலும் பிரதமர் சொன்னதையும் இதையும் கம்பேர் பண்ணாதீங்க.. சொல்றார் மோகன்ராஜா
சென்னை: பிரதமர் மோடி சொன்ன விஷயத்தையும் வேலைக்காரன் பட காட்சியையும் ஒப்பிட வேண்டாம் என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது.
'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்?' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க!
ஷூட்டிங் ரத்து
இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலாளர்களும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.
ஒற்றுமை
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மக்களிடையே பேசும்போது ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்றி, கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் மக்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வேலைக்காரன்
பிரதமர் சொன்ன ஒளியேற்றும் செயல்பாடு, சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கிறது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இரவு 12 மணிக்கு வீட்டில் அனைவரும் மின் விளக்கு ஏற்றி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஹீரோ கேட்பார். மக்கள் ஆதரவு கொடுப்பது போல் அதன் காட்சி இருக்கும்.
மோகன் ராஜா
இதையடுத்து ரசிகர்கள், இதை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரதமர் சொன்னதையும் வேலைக்காரன் பட காட்சியையும் ஒப்பிட வேண்டாம் என்று வேலைக்காரன் பட இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை, கனவில் கூட நாம் நினைத்திருக்க மாட்டோம்.
ஒப்பிடவேண்டாம்
படத்தில் வரும் சூழ்நிலையும் இப்போதைய சூழலும் வேறு, வேறு. இருந்தாலும் யோசனை ஒன்றுதான். மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது, இருந்தாலும் அதையும் இதையும் ஒப்பிடவேண்டாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்களும் நிபுணர்களும் மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் பீதியடையாமல் அமைதிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.