Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விக்ரமை விட்டுடுங்க! - கரிகாலன் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்
விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்ரம் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளரையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளார். அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இப்படத்துக்காக ராஜா காலத்து ஆடை ஆபரணங்கள் பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டு உள்ளன. அரங்குகளும் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் வழக்கு தொடர்ந்து இருப்பது படத்தை வெகுவாக பாதித்துள்ளது.
இதுகுறித்து 'கரிகாலன்' பட தயாரிப்பாளர்கள் எஸ். பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குனரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்கள் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனான விக்ரமை சம்பந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல்.
இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜசேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம். நேர்மையான முறையில் வழக்கை சந்திப்போம்," என்று கூறியுள்ளனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!