Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரதட்சணை புகார்.. நடிகர் கிருஷ்ணாவின் வேண்டுகோள்!
சென்னை: மனைவியின் வரதட்சணை புகார் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருவேன். இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள்.
சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உரிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.
இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது.
தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.