Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.
கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.
மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.