twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவியின் கணவருக்கு வலுக்கும் பிரச்சனை: துபாயில் இருந்து வெளியேற தடை

    By Siva
    |

    Recommended Video

    ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்!- வீடியோ

    துபாய்: ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் துபாயில் இருந்து வெளியேறக் கூடாது என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னவர் அவர் மும்பை திரும்ப அனுமதி அளித்துள்ளனர்.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் தீவிர விசாரணை நடத்தியது.

    விசாரணை

    விசாரணை

    ஸ்ரீதேவியை கடைசியாக உயிரோடு பார்த்த அவரின் கணவர் போனி கபூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மும்பை வந்த அவர் மீண்டும் சனிக்கிழமை மாலை துபாய் சென்றது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.

    துபாய்

    துபாய்

    ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்திய போலீசார் தாங்கள் சொல்லும் வரை துபாயை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்னர் அவர் இந்தியா திரும்பி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தாமதம்

    தாமதம்

    ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்ப்பததால் அவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் கிளியரன்ஸ் சான்று கொடுக்காமல் தாமதம் செய்தது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    துபாய் போலீஸ் இன்று கிளியரன்ஸ் சான்று வழங்கியுள்ளது. இதையடுத்து எம்பாமிங் செய்யப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் இன்றே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    English summary
    Dubai Public Prosecution has reportedly asked actress Sridevi's husband Boney Kapoor not to leave Dubai without their permission. Sridevi died of accidental drowning which kindles suspicion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X